×

திருவாரூர் மாவட்ட பள்ளிகளில் சிறப்பாக பணியாற்றிய என்எஸ்எஸ் திட்ட அலுவலர்களுக்கு சுழற்கோப்பை

திருவாரூர், ஆக.11: திருவாரூர் மாவட்டத்தில் என்.எஸ்.எஸ். அமைப்பில் சிறப்பாக பணியாற்றிய திட்ட அலுவலர்களுக்கு சுழற் கோப்பையினை முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன் வழங்கினார். திருவாரூர் மாவட்ட பள்ளி கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் மேல்நிலைப் பள்ளிகளில் கடந்த கல்வியாண்டில் நாட்டு நல பணித்திட்ட செயல்பாடுகளில் சிறப்பாக செயல்பட்ட என்.எஸ்.எஸ் அமைப்புகள் மற்றும் திட்ட அலுவலர்களுக்கு பாராட்டு விழா திருவாரூர் வ.சோ. ஆண்கள்மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட கல்வி அலுவலர்கள் பார்த்தசாரதி மற்றும் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட நாட்டு நல பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜப்பா வரவேற்றார். இதில் சிறப்பாக செயல்பட்ட என். எஸ். எஸ். திட்ட அலுவலர்களுக்கு சுழற் கோப்பைகளை வழங்கி முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன் பேசுகையில், மாநிலத்தில் வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத வகையில் திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 2018ம் ஆண்டு முதல் நாட்டுநலப்பணி (என்எஸ்எஸ்) திட்ட அலுவலர்களை பாராட்டி சுழற் கோப்பைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த 2021- 22-ல் நாட்ட நலப்பணிகளில் சிறப்பாக செயல்பட்ட பள்ளிகளில் இருந்து கருத்துருக்கள் பெறப்பட்டு தேர்வு குழுவினர் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இன்று கோப்பைகள் வழங்கப்படுகின்றன என்று தெரிவித்தார்.

Tags : NSS ,Tiruvarur District Schools ,
× RELATED என்எஸ்எஸ் திட்ட முகாம்