×

பழநியில் தபால் ஊழியர்கள் விழிப்புணர்வு பேரணி

பழநி, ஆக. 10:  நாடு முழுவதும் 75வது சுதந்திர தினத்தையொட்டி வீடுகளில் தேசியக்கொடியேற்றி மரியாதை செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி தபால் அலுவலகங்களில் தேசியக்கொடி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் பழநியில் தபால் துறை சார்பில் தேசியக்கொடி ஏற்றுவது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடந்தது. இதில் தலைமை தபால் நிலைய அலுவலக பணியாளர்கள், ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். தபால் அலுவலகத்தில் இருந்து துவங்கிய பேரணி புதுதாராபுரம் சாலை, வேல் ரவுண்டானா, பஸ் நிலையம் வழியாக சென்று மீண்டும் தபால் நிலையம் வந்தடைந்தது.  பேரணியில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேசியக்கொடி ஏந்தியபடி சென்றனர்.

Tags : Postal workers awareness ,Palani ,
× RELATED பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை: பாஜ மாவட்ட செயலாளர் கைது