×

திருவாரூரில் நடந்த குறைதீர் கூட்டத்தில் ரூ.2.50 லட்சத்திற்கான நலத்திட்ட உதவிகள்

திருவாரூர்,ஆக.9: திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவியினை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார். திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் காயத்திரி கிருஷ்ணன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் பட்டா பெயர் மாற்றம், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்வி கடன் மற்றும் வீட்டு மனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 211 மனுக்களை பொதுமக்களிடமிருந்து கலெக்டர் காயத்திரி கிருஷ்ணன் பெற்றுக்கொண்டார்.

பின்னர் இந்த மனுக்கள் அனைத்தையும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி குறித்த காலத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்தார். அதனை தொடர்ந்து கைத்தறித்துறை சார்பில் 8வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு கைத்தறி நெசவாளர் சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 4 நபர்களின் சேமிப்பு தொகையாக ரூ.2 லட்சத்து 3 ஆயிரத்து 215க்கான காசோலை மற்றும் முத்ரா கடன் திட்டத்தின் கீழ் ஒரு நபருக்கு ரூ.50 ஆயிரத்திற்கான காசோலை ஆகியவற்றை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார். கூட்டத்தில் டிஆர்ஒ சிதம்பரம், சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியர் கண்மணி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Tiruvarur ,
× RELATED தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள...