×

வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுதுறையில் தூண்டில் முள் வளைவு அமைக்கும் பணி

வேதாரண்யம், ஆக.9: ஆறுகாட்டுத்துறை 500க்கும் மேற்பட்ட பைபர் மற்றும் விசைப்படகுகள் உள்ளன. இந்த படகுகளை மழைக்காலங்களில் கடல் சீற்றத்தின் போது, பாதுகாத்துக் கொள்வதற்கு கடற்கரையில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என மீனவர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். மீனவர்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.150 கோடியில் தூண்டில் வளைவு அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது துரிதமாக நடைபெற்று வரும் இந்த பணியை நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் ஆறுகாட்டுத் துறையில் அகல ரயில் பாதை பணியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியும் பார்வையிட்டார். பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். ஆய்வின்போது வேதாரண்யம் ஆர்டிஓ ஜெயராஜ பெளலின், தாசில்தார் ரவிச்சந்திரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார், நகராட்சி ஆணையர் ஹேமலத, ஆறுகாட்டுதுறை மீனவ பஞ்சாயத்தார்கள் ராஜேந்திரன் முருகையன்,மயில்வாகனம், கணக்காளர் பழனி உள்ளிட்ட மீனவ கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

Tags : Arukatuthurai ,Vedaranyam ,
× RELATED வேதாரண்யம் அருகே குடிதண்ணீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் மறியல்