×

திருவாரூரில் ராம்ராஜ் காட்டன் சார்பில் சிறப்பு பட்டிமன்றம்

திருவாரூர், ஆக.8: திருவாரூரில் ராம்ராஜ் காட்டன் சார்பில் சன் டிவி புகழ் ராஜா தலைமையில் நடைபெற்ற பட்டிமன்றத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருவாரூர் பழைய பேருந்து நிலையம் எதிரே இயங்கி வரும் தைலம்மை திரையரங்கம் வளாகத்தில் ராம்ராஜ் காட்டன் ஷோரூம் திறப்பு விழா இன்று காலை நடைபெறுகிறது. இதனையொட்டி சன் டிவி புகழ் ராஜா நடுவராக பங்கேற்ற சிறப்பு பட்டிமன்றம் நேற்றிரவு திருவாரூர் கமலாலயம் வடகரையில் இருந்து வரும் லட்சுமி மஹாலில் நடைபெற்றது. மாவட்ட எஸ்பி டி.பி. சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ராம்ராஜ் காட்டன் நிறுவனத் தலைவர் கே.ஆர்.நாகராஜன் வரவேற்றார். இதில் உலக சமுதாய சேவாசங்க கும்பகோணம் மண்டல தலைவர் அருள்நிதி எஸ்.முத்து மற்றும் திருவாரூர் மனவளக்கலை பேராசிரியர் அருள்நிதி சுந்தரி தியாகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர். மேலும் பாரம்பரியத்தை அதிகம் பேணுவது ஆண்களா பெண்களா என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த சிறப்பு பட்டிமன்றத்தில் ஆண்களே என்ற தலைப்பில் ராஜ்குமார் மற்றும் சேஷாத்ரியும், பெண்களே என்ற தலைப்பில் முனைவர் குருஞானாம்பிகா மற்றும் பாரதி பாஸ்கர் ஆகியோரும் கலந்துகொண்டு பேசினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : Ramraj Cotton ,Tiruvarur ,
× RELATED தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள...