×

குறுக்கெழுத்துப்போட்டி-1 (பரிசுத்தொகை ₹2500)தஞ்சாவூர் மாவட்டத்தில் 4744 பேருக்கு தடுப்பூசி செலுத்தல்

தஞ்சாவூர், ஆக. 8: தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று 4744 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் நேற்று குழந்தை தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. இதையடுத்து மெலட்டூர் வட்டார பகுதியான அம்மாபேட்டை மெலட்டூர் சாலியமங்கலம் பூண்டி அரசு ஆரம்ப சுகாதார துறை தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. இதில் மெலட்டூர் பகுதியில் 540 பேர் முதல் தவணைத் தடுப்பூசியும், 735 பேர் பூஸ்டர் தடுப்பூசியும், சாலியமங்கலத்தில் 759 பேர் 2ம் தவனை தடுப்பூசியும், 542 பேர் பூஸ்டர் தடுப்பூசியும், அம்மாபேட்டையில் 319 பேர் 2ம் தவனை தடுப்பூசியும், 760 பேர் பூஸ்டர் தடுப்பூசியும், பூண்டியில் 440 பேர் 2வது தவணை தடுப்பூசியும், 649 பேர் பூட்டேர் தவணை தடுப்பூசியும் செலுத்தி கொண்டனர். இந்நிலையில் மொத்தமாக 540 பேர் முதல் தவணைத் தடுப்பூசியும் 1518 பேர் 2ம் தவணைத் தடுப்பூசியும், 2,686 பேர் 3ம் தவணைத் தடுப்பூசியும் மொத்தமாக 4744 பேர் இந்த சிறப்பு முகாமில் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.


Tags : Thanjavur ,
× RELATED தஞ்சாவூரில் பட்டப்பகலில் பரபரப்பு...