சீர்காழி, ஆக. 8: சீர்காழி நகராட்சி ஆணையர் ராஜகோபாலன் ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது: சீர்காழி நகராட்சிக்கு குடிநீர் ஆதாராமாக விளங்கும் சித்தமல்லி கொள்ளிடம் ஆற்றில் மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் அதிகப்படியான உபரி நீரினால் நகராட்சி பிரதான குடிநீர் வழங்கும் நீர் உறிஞகம் கிணறுகள் முழுவதும் மூழ்கியுள்ளதால் நகராட்சிக்கு உள்ளூர் நீர்ஆதாரங்களின் மூலம் பொதுமக்களுக்கு, தேவையான அளவு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் அனைவரும் நகராட்சி மூலம் தினசரி வழங்கப்படும் குடிநீரினை, வீணாக விரையம் செய்யாமல், தேவைக்கேற்ப சிக்கனமாக பயன்படுத்தியும் வீணாக்காமலும் நகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.