×

காரைக்குடி பள்ளியில் நூல் வெளியீட்டு விழா

காரைக்குடி, ஆக.8:  காரைக்குடி வித்யாகிரி பள்ளியில் வள்ளுவர் அறநிலையத்தின் சார்பில் நூல்கள் வெளியீட்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா நடந்தது. நிறுவனர் செயம்கொண்டான் வரவேற்றார். வட்டாட்சியர் மாணிக்கவாசகம் தலைமை வகித்தார். புரவலர் நாச்சியப்பன் முன்னிலை வகித்தார்.
 விழாவில் அழகப்பர் அந்தாதி 3ம் பதிப்பு, மாணவர்கள் பாலமுத்துக்குமார், சுபிஷா, தொல்பியாலூர்து, மோகனஈவர், ராகுல் எழுதிய விதைநெல் 500, சொன்னபடி கண்டுபிடி ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டது. வினாடிவினா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. புலவர் மெய்யாண்டவர், ஜேசிஐ கிங்ஸ் தலைவர் ராஜிவ், ரோட்டரி பியர்ல் தலைவர் சிவசுப்பிரமணியன், பொதுக்காப்பீட்டு வளர்ச்சி அதிகாரி கவிஞர் ராமகுமாரன், முதுகலை தமிழாசிரியர் பாண்டிக்குமார், தமிழாசிரியர் செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொணடனர். திருக்குறட்செல்வன் பிரபாகரன் நன்றி கூறினார்.

Tags : Karaikudi School ,
× RELATED காரைக்குடி பள்ளியில் சர்வதேச யோகா தினம்