×

ஆக்கிரமிப்புகளை அகற்றுங்கள் நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு

ஒட்டன்சத்திரம். ஆக. 8: ஒட்டன்சத்திரம்  நெடுஞ்சாலை   பகுதிகளில் முதலமைச்சர் சாலை மேம்பாட்டுதிட்டத்தின் கீழ் சாலை அகலப்படுத்தி மேம்பாட்டுப் பணிகள் நடைபெற இருக்கின்றன. இதனால் லக்கையன்கோட்டை முதல் அரசப்பிள்ளைபட்டி பிரிவு வரை  உள்ள ஆக்கிரமப்புகளை நீதிமன்ற உத்தரவுப்படி ஏழு நாட்களுக்குள் சம்பந்தப்பட்டவர்கள் தாமாக முன்வந்து அகற்றிக்கொள்ள வேண்டும் என நெடுஞ்சாலைத்துறயைினர் அறிவித்து உள்ளனர். அதுபோல் சம்பந்தப்பட்டவர்கள் அகற்றாவிடில் அதனை நெடுஞ்சாலைத்துறை அகற்றுவதுடன் அதற்கான இழப்பீட்டுத்தொகைை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Highways Department ,
× RELATED அதிமுக பிரமுகர் வீட்டில் வருமான வரித்துறையினர் ரெய்டு