×

திண்டுக்கல்லில் கலைஞர் நினைவு தினம் அனுசரிப்பு உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி

திண்டுக்கல், ஆக. 8:திண்டுக்கல்லில் தமிழக முன்னாள் முதலமைச்சரும் திமுக முன்னாள் தலைவருமான  கலைஞர் கருணாநிதியின் 4ம் ஆண்டு நினைவு தினம்  திண்டுக்கல் கலைஞர் மாளிகை முன்பாக நேற்று நடைபெற்றது. கலைஞர் கருணாநிதியின் திரு உருவப்படத்திற்கு திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐபி செந்தில்குமார் தலைமையில் மலர் தூவி  மரியாதை செலுத்தினர். இதில் திண்டுக்கல் திமுக மாவட்ட துணை செயலாளர்கள் நாகராஜன், தண்டபாணி, மணி முருகன், மார்க்கெட் மேரி, நகரச் செயலாளரும் துணை மேயருமான ராஜப்பா, ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், திண்டுக்கல் மேயர் இளமதி ஜோதி பிரகாஷ், ஒன்றிய பெருந்தலைவர் ராஜா, முன்னாள் நகர் மன்ற தலைவர் நடராஜன், மாமன்ற பொதுக்குழு உறுப்பினர் அக்பர், மாவட்ட இலக்கிய அணி முருகானந்தம், மாவட்ட விவசாய அணி இல.கண்ணன், மற்றும் கிளைக் கழகச் செயலாளர்கள், திண்டுக்கல் மாவட்ட உறுப்பினர்கள், நகர ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Dindigul ,
× RELATED திண்டுக்கல்-நத்தம் ரோட்டில்...