×

தப்பி ஓடிய கைதி கோர்ட்டில் சரண்

சிவகங்கை, ஆக.6: சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே பொன்னங்கால் கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன்(32). இவரை ஒரு வழக்கில் காளையார்கோவில் போலீசார் கைது செய்தனர். பின்னர் காளையார்கோவில் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் முத்துராமலிங்கம் மற்றும் ராஜூ ஆகிய இரண்டு போலீசார் மனோகரனை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக சிவகங்கை அழைத்து வந்தனர். அவருடன் மற்றொரு வழக்கில் தொடர்புடைய சௌந்தரராஜன் என்பவரையும் கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர். கோர்ட்டில் சௌந்தரராஜனை சிறையில் அடைக்க உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து ரெண்டு போலீசாரும் சிவகங்கை கிளை சிறைக்கு சௌந்தரராஜனை அழைத்து வந்தனர். அவர்களுடன் மனோகரனும் உடன் வந்தார். சிவகங்கை கிளைச் சிறை வாசலில் நிற்கும்போது மனோகரன் தப்பி ஓடி விட்டார். இது குறித்து சிவகங்கை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் தப்பியோடிய மனோகரன் சிவகங்கை மகிளா நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதி ஆப்ரின் பேகம் முன்னிலையில் நேற்று சரணடைந்தார். அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Tags : Saran ,
× RELATED ஜாமீன் மனு தள்ளுபடி திகார் சிறையில் டெல்லி மாஜி அமைச்சர் சரண்