×

பண்ருட்டி அருகே பரபரப்பு பெண் குழந்தை பெற்றெடுத்த 10ம் வகுப்பு பள்ளி மாணவி

பண்ருட்டி, ஆக. 6: பண்ருட்டி அருகே கோட்டலாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் லோகநாதன் மகன் ராஜா (21). ஐடிஐ படித்துள்ளார். இவர் அதே கிராமத்தை சேர்ந்த புதுப்பேட்டை அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை கடந்த 2 ஆண்டுக்கு முன்பு காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத போது மாணவியிடம் தகாத முறையில் நடந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 3ம் தேதி ஆடி பெருக்கு விழாவை முன்னிட்டு பள்ளி மாணவிக்கு நகை எடுக்க அவரது தாய் விழுப்புரத்தில் உள்ள ஒரு நகைக்கடைக்கு மகளை அழைத்து சென்றிருந்தார். அப்போது பள்ளி மாணவிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டதால் அவர் தனது தாயிடம் தெரிவித்தார். இதையடுத்து மாணவியின் தாய், அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சேர்த்தார். அங்கு மருத்துவர்கள், மாணவிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இதையடுத்து மாணவிக்கு பிரசவம் நடந்து முடிந்ததில், அவருக்கு பெண் குழந்தை பிறந்து உள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாய், இதுதொடர்பாக மாணவியிடம் கேட்டபோது ராஜாதான் காரணம் என தெரிவித்தார். இதுகுறித்து மாணவியின் தாய் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிந்து ராஜாவை தேடி வருகின்றனர். 10ம் வகுப்பு பள்ளி மாணவி குழந்தை பெற்றெடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Panruti ,
× RELATED காங்கிரஸ் வேட்பாளர் காரில் சோதனை