×

தமிழகம் முழுவதும் 2022-23ம் ஆண்டுக்கான செயல் அலுவலர்கள் 19 பேருக்கு பதவி உயர்வு; அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அறிவிப்பு

சென்னை: 2022-23ம் ஆண்டுக்கான செயல் அலுவலர் நிலை-2 லிருந்து நிலை-1க்கு பதவி  உயர்வு பெறத் தகுதி வாய்ந்த செயல் அலுவலர்களுக்குப் முதுநிலைப்படி பதவி உயர்வு அளித்து இந்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: 2022-23ம் ஆண்டுக்கான செயல் அலுவலர் நிலை-2 லிருந்து நிலை-1க்கு பதவி உயர்வு பெறத் தகுதி வாய்ந்த செயல் அலுவலர் பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து பட்டியலில் இடம் பெற்றுள்ள கீழ்க்கண்ட செயல் அலுவலர்களுக்குப் முதுநிலைப்படி பதவி உயர்வு அளித்து ஆணை பிறக்கப்பிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பதவி உயர்வு பெற்ற செயல் அலுவலர்களுக்கு நிலை-1 பதவியில் பணிநியமனம் அளித்து ஆணையிடப்படுகிறது.

அதன்படி திருவாரூர், திருத்துறைப்பூண்டி, கற்பகநாதர் கோவில் அறிவழகன் பதவி உயர்வு பெற்று சமயபுரம் (அயற்பணி) மாரியம்மன் கோவிலுக்கும், கோவை நகர், கோட்டை சங்கமேஸ்வரர் ஜெயசெல்வம் பதவி உயர்வு பெற்று திருப்பூர் மாவட்டம், மாரியம்மன் விநாயகர் கோவிலுக்கும், நெல்லை மாவட்டம், வீரவநல்லூர், பூமிநாகசுவாமி கோவில் வெங்கடேஸ்வரன் பதவி உயர்வு ெபற்று திருச்செந்தூர் (அயற்பணி),  சுப்ரமணியசுவாமி கோவிலுக்கும், திருச்சி மாவட்டம், துறையூர் நகர், பிரசன்ன வெங்கடாஜலபதி யுவராஜ் பதவி உயர்வு பெற்று ஈரோடு மாவட்டம், கொடுமுடி, மகுடேஸ்வரர் கோவிலுக்கும், சேலம் மாவட்டம், சித்தேஸ்வரர் கோவில் சங்கரன் பதவி உயர்வு பெற்று சேலம், சங்ககிரி வட்டம், வரதராஜப் பெருமாள் கோவில் உள்பட 19 பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ள செயல் அலுவலர்களைத் தக்க மாற்று ஏற்பாடுகள் செய்து உடனடியாகப் பணியிலிருந்து விடுவிக்குமாறு தொடர்புடைய இணை ஆணையர்களை கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,Charity Commissioner ,Kumaragurupara ,
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...