சேலம், ஆக.5: ஆடிப்பூரத்தையொட்டி ராமகிருஷ்ணா சாலையில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சக்தி பீடம் சார்பில் கஞ்சி கலயம், அக்னி சட்டி, அலங்கரிக்கப்பட்ட குரு, அம்மன் படத்துடன் ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலம் 5 ரோட்டில் தொடங்கி அழகாபுரம் மாரியம்மன் கோயிலில் அமைந்துள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்திலிருந்து புறப்பட்டு சாரதா கல்லூரி வழியாக சக்தி பீடத்தை வந்தடைந்தது. பின்னர் கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சியும், அதை தொடர்ந்து பாலாபிஷேகமும், அன்னதானமும் நடந்தது. இந்த ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர்.