×

கலைஞர் நினைவு நாளில் மாநகர் தெற்கு மாவட்ட திமுக சார்பில் அமைதி பேரணி தளபதி எம்எல்ஏ அறிக்கை

மதுரை, ஆக.4: கலைஞரின் 4ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மதுரை மாநகர் தெற்கு மாவட்ட திமுக சார்பில் அமைதிப் பேரணி நடைபெறும் என மாவட்ட பொறுப்பாளர் கோ.தளபதி எம்எல்ஏ தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது அறிக்கை; அரசியல், பொதுவாழ்வு, கலை, இலக்கியம் என தொட்ட அனைத்து துறைகளிலும் வெற்றிகரமான பல சாதனைகள் படைத்த கலைஞரின் 4ம் ஆண்டு நினைவு நாள் ஆக.7ம் தேதி காலை 8 மணிக்கு அமைதிப் பேரணி நடைபெறுகிறது. இந்த பேரணி தமிழ் சங்கம் ரோட்டிலிருந்து புறப்பட்டு சிம்மக்கல்லில் முடிவடையும். அங்குள்ள கலைஞரின் சிலைக்கு மாவட்ட பொறுப்பாளர் கோ.தளபதி எம்எல்ஏ தலைமையில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்படும். இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள், பொதுக்குழு, பகுதி செயலாளர்கள், வட்ட செயலாளர்கள், ஒன்றிய பேரூர் கிளை கழக செயலாளர்கள், நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், கழக முன்னோடிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும். மேலும் வட்ட கழகங்கள் மற்றும் கிளை கழகங்கள் தோறும் கலைஞரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : MLA ,Capital South District DMK ,
× RELATED கணேசமூர்த்தி எம்பி மறைவு: ஈஸ்வரன் எம்எல்ஏ இரங்கல்