×

4 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

மதுரை, ஆக.4: மதுரை மாநகர காவல்துறையில் 4 இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து மநாகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளனர். மதுரை கண்ட்ரோல் ரூம் இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன் விளக்குத்தூண் சட்டம் ஒழுங்கு பிரிவுக்கும், விளக்குத்தூண் இன்ஸ்பெக்டர் லிங்கபாண்டி திருப்பரங்குன்றம் சட்டம்-ஒழுங்கு பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர். திருப்பரங்குன்றம் சட்டம்-ஒழுங்கு பிரிவு இன்ஸ்பெக்டர் சுந்தரி கூடல்புதூர் குற்றப் பிரிவுக்கும், மதுரை மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கீதா பெரிய நாச்சியார் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சட்டம் ஒழுங்கு பிரிவிற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Tags :
× RELATED குளச்சல் அருகே மீன்பிடித் தொழிலாளியிடம் செல்போன் திருடியவர் கைது