×

தலையாட்டி பொம்மைகள், பொய்க்கால் குதிரையுடன் கல்லணையில் புதிய மகளிர் குழு அங்காடி அமைப்பு தஞ்சாவூர் கலெக்டர் திறந்தார்

தஞ்சாவூர், ஆக.4: தலையாட்டி பொம்மைகள், பொய்க்கால் குதிரைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுடன் கூடிய புதிய மகளிர் குழு அங்காடியை தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேற்று தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்வதற்கு , தாரகைகள் கைவினை பொருட்கள் அங்காடி உருவாக்கப்பட்டுள்ளது. மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் அனைத்து மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு கூடுதல் விற்பனை வாய்ப்பு, கூடுதல் வருவாய் மற்றும் வேலை வாய்ப்பை உருவாக்கி தரும் நோக்கத்தில் இந்த மையங்கள் செயல்பட்டு வருகின்றன. தஞ்சாவூர் மாநகராட்சியில் பூ மாலை வணிக வளாகத்தில் தஞ்சை தாரகைகள் கைவினை பொருட்கள் மகளிர் சுய உதவிக்குழு விற்பனை அங்காடி நேற்று தொடங்கப்பட்டது.

இதன் மூலம் 35 மகளிர் சுய உதவி குழுக்கள் உற்பத்தி பொருட்கள் விற்பனைக்கு இதன் மூலம் 125 குழு உறுப்பினர்களும் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பை பெற்று வருகின்றனர்.  தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற கல்லணை அணைப்பகுதியில் மகளிர் சுய உதவிக்குழுவினர் தயார் செய்யும் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்திடவும், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் எளிதில் பொருள்களை வாங்க ஏதுவாக கல்லணையில் புதிய விற்பனை அங்காடி அமைத்திட முடிவு செய்யப்பட்டு, அந்த அங்காடியை, தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேற்று தொடங்கி வைத்தார்.

இந்த அங்காடியில், மகளிர் சுயஉதவி குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் கைவினைப் பொருட்களை தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள், நடமா டும் பொம்மைகள், பொய்கால் குதிரைகள், கால் மிதியடி பொம்மை வகைகள், பைகள், மூங்கில் கூடைகள், பனைப்பொருட்கள், விளையாட்டு பொம்மைகள் உள்ளிட்ட பல வகையான பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மகளிர் திட்ட இயக்குநர், செயற்பொறியாளர், உதவி திட்ட அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மகளிர் திட்ட களப்பணியாளர், மகளிர் சுய உதவிக்கு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.

Tags : Thanjavur Collector ,Kallanai ,Talayati ,
× RELATED வேட்பாளர்களுக்கான 3ம் கட்ட ஒத்திசைவு கூட்டம்