×

தூத்துக்குடி முத்துகிருஷ்ணாநகர் பகுதியில் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: மேயர் ஜெகன்பெரியசாமி அறிவுறுத்தல்

தூத்துக்குடி, ஆக. 4: தூத்துக்குடி முத்துகிருஷ்ணாநகர் பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென மேயர் ஜெகன்பெரியசாமி அறிவுறுத்தி உள்ளார். தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் எதிர்வரும் பருவமழையை கருத்தில்கொண்டு அதற்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சிக்குட்பட்ட குடியிருப்புகள், முக்கிய சாலைகள், சாலை சந்திப்புகள் போன்ற இடங்களில் மழைநீர் தேங்காத வகையில் புதிதாக மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. 17வது வார்டுக்குட்பட்ட பகுதிகளான முத்துகிருஷ்ணாநகர், பால்பாண்டி நகர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகளை மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது: தூத்துக்குடி மாநகரில் மழை காலத்தை கருத்தில்கொண்டு முன்னேற்பாடு பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாநகரில் மழைநீர் வடிகால்கள் புதிதாக அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் அனைத்தையும் வரும் மழை காலத்திற்கு முன்பு முடித்திட பணி ஒப்பந்ததாரர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இதன்படி மாநகரில் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் சரியான முறையில் நடைபெறுகிறதா? என அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டும் வருகிறோம். இந்தாண்டில் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் மழைநீர் வடிகால்கள் மழை காலங்களில் எப்படி  செயல்படுகிறது என்பதை முழுமையாக கண்டறிந்து அடுத்துவரும் ஆண்டுகளில் இப்பணிகள் மேம்படுத்தப்படும், என்றார். ஆய்வின்போது மேயரின் உதவியாளர்கள் ரமேஷ், ஜேஸ்பர், பிரபாகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags : Tuticorin Muthukrishnanagar ,Mayor ,Jaganperiyaswamy ,
× RELATED ஈக்வடார் நாட்டின் மேயர் பிரிஜிட்...