×

முக்கூடலில் காய்கறி வாரச்சந்தை திறப்பு

பாப்பாக்குடி, ஆக.4:  முக்கூடலில் காய்கறி மற்றும் பல் பொருட்கள் வாரச்சந்தை திறப்பு விழா நடைபெற்றது. நெல்லை முன்னாள் திமுக எம்பி சிவப்பிரகாசம் தலைமை வகித்து வாரச்சந்தையை திறந்து வைத்தார். லட்சுமண நாராயண ராஜா, முக்கூடல் இன்ஸ்பெக்டர் கோகிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சொக்கலால் நிறுவன கதிரேஷ் ராம்சேட் வரவேற்றார். மீனாராஜா குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். முதல் விற்பனையை உமாகதிரேசன் தொடங்கி வைத்தார்.
சந்தை வாரம்தோறும் புதன்கிழமை காலை முதல் இரவு வரை நடைபெறும் வகையில் திறக்கப்பட்டுள்ளது.

இதில் காய்கறி, பழவகைகள், மீன், கருவாடு அசைவங்கள், இனிப்பு கார வகைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் போன்றவை விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் நாளில் 50க்கும் மேற்பட்ட கடைகளை வியாபாரிகள் அமைத்து விற்பனை நடைபெற்றது. விழாவில் இந்திய ஜவுளி வாரிய உறுப்பினர் கருணாகரன், காய்கறி வியாபார சங்க கனகசபாபதி, சப் இன்ஸ்பெக்டர் ஆல்வின், துணை சேர்மன் மாரிவண்ணமுத்து, சமூக ஆர்வலர் அரியநாயகிபுரம் மீனாட்சி சுப்பிரமணியன், வேளாண் கூட்டுறவு சங்கத் தலைவர் சுதர்சன் மற்றும் வியாபாரி சங்கம், ஹரிராம் சேட் நற்பணி மன்றம், காமராஜர் நற்பணி மன்றத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் விவசாயிகள் பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags : Mukodal ,
× RELATED நெல்லை முத்துமாலை அம்மன் கோயில்...