×

திருவள்ளூர் அருகே பரபரப்பு; மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற முதியவருக்கு அடி உதை, 3 பேரிடம் விசாரணை

திருவள்ளூர்: மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற முதியவருக்கு சரமாரியாக  அடி உதை விழுந்தது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.  
திருவள்ளூர் அடுத்த அரண்வாயல்குப்பம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகள் சுமதி (17, பெயர்கள் மாற்றம்). இவர், திருவள்ளூர் அடுத்த மணவாளநகரில் உள்ள ஒரு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முந்தினம் மாலை வகுப்பு முடிந்ததும் பஸ்சில் வீட்டுக்கு புறப்பட்டார் சுமதி. அவரை, திருவள்ளூர் அடுத்த பெரியகுப்பத்தை சேர்ந்த ஸ்டீபன் (51) தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த சுமதி, நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுமதியின் தாய், திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில், மூர்த்தி, அரண்வாயல்குப்பத்தை லோகேஷ் (31), ஜெகன் (24) ஆகியோர் ஸ்டீபனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த ஸ்டீபன், சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதே நேரத்தில் ஸ்டீபனை தாக்கியதாக அவரது மனைவி கற்பகம் (48), மணவாள நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து மூர்த்தியை அழைத்து வந்ததனர். மேலும், ஸ்டீபன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் அவரிடமும் விசாரிக்க போலீசார முடிவு செய்தனர்.

Tags : Bustle ,Tiruvallur ,
× RELATED அரசு பஸ் கவிழ்ந்து 18 பயணிகள் படுகாயம்; வந்தவாசி அருகே பரபரப்பு