×

திருப்பூர் வெங்கடேஸ்வரா நகரில் கழிவுநீர் வடிகால் பாதிப்புகளை மேயர் ஆய்வு

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் மேயர் தினேஷ்குமார் பல்வேறு  பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மாநகராட்சி பகுதிகளில் அடிப்படை  வசதிகளை மேம்படுத்தும் வகையில் நடந்து வருகிற பணிகளை ஆய்வு செய்கிறார்.  தொடர்ந்து பணிகளை விரைவாக முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு  உத்தரவிட்டு வருகிறார்கள். இந்நிலையில் மேயர் தினேஷ்குமார் நேற்று காலை  3-வது மண்டலத்திற்கு உட்பட்ட 35-வது வார்டு சக்தி தியேட்டர் ரோடு மற்றும்  ஈஸ்வரன் கோவில் நொய்யல் பாலம் ஆகிய பகுதிகளில் நடந்து வருகிற சாலை  மறுசீரமைப்பு பணிகளை ஆய்வு செய்தார். மேலும், இதுபோல் 45-வது வார்டுக்கு  உட்பட்ட வெங்கடேஸ்வராநகரில் சாயப்பட்டறை பகுதியில் உள்ள கழிவுநீர் வடிகால்  பாதிப்புகளையும் ஆய்வு செய்து, அதனை சீரமைக்க உத்தரவிட்டார். இந்த  நிகழ்ச்சியில் துணை மேயர் பாலசுப்பிரமணியம், 3-வது மண்டல தலைவர்  கோவிந்தசாமி, பகுதி செயலாளர் மு.க.உசேன், கவுன்சிலர் செந்தூர் முத்து, வட்ட  கழக செயலாளர் முகமது அலி, அசேன், கமால், கந்தசாமி, சையது, ஜியாவுலக் உள்பட  நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Tags : Mayor ,Thiruppur Venkateswara ,
× RELATED கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!