×

விராலிமலை அருகே விவசாய பண்ணையில் விஷ வண்டுகள் அழிப்பு

விராலிமலை,ஆக.3: தென்னை மரத்தில் கூடு கட்டி இருந்த விஷ வண்டுகளை தீ பந்தங்கள் கொண்டு தீயணைப்பு துறையினர் அழித்தனர். புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலை விவசாய பண்ணையில் நூற்றுக்கணக்கான தென்னை மரங்கள் வளர்ந்து நின்று தேங்காய் உற்பத்தியில் பெரும் பங்காற்றி வருகின்றன. இந்நிலையில் தோப்பில் நடுவில் இருக்கும் ஒரு தென்னைமரத்தில் விஷ வண்டுகள் கூடுகட்டி தேங்காய் உற்பத்தியின் வளர்ச்சியை தடுத்து வந்ததோடு அப்பகுதிக்கு யாரும் செல்ல முடியாத நிலை இருந்து வருவதாக விவசாய பண்ணையினர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து நிலை அலுவலர் முருகேசன் தலைமையிலான தீயணைப்பு துறையினர் நிகழ்விடம் சென்று நீளமான குச்சியின் முனையில் தீப்பந்தங்கள் கட்டி அதில் கொளுந்து விட்டு எரியும் தீயை பற்ற வைத்து விஷ வண்டுகளை முற்றிலுமாக அளித்தனர்.

Tags : Viralimalai ,
× RELATED இலுப்பூர் அருகே கிராமநிர்வாக அலுவலரை தாக்கி செல்போன் பறிப்பு