×

நாகையில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

நாகப்பட்டினம், ஆக.3: நாகப்பட்டினம் கோட்டத்திற்கு உட்பட்ட மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் இன்று (3ம் தேதி) நடைபெறுகிறது என செயற்பொறியாளர் சேகர் தெரிவித்துள்ளார். நாகப்பட்டினம் கோட்ட மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் இன்று (3ம் தேதி) காலை 11மணி அளவில் நாகப்பட்டினம் இரண்டாவது கடற்கரை சாலையில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில் நாகப்பட்டினம், வெளிப்பாளையம், நாகூர், திருமருகல், கங்களாஞ்சேரி, சிக்கல், கீழ்வேளூர், வேளாங்கண்ணி, திருப்பூண்டி, திருக்குவளை, விழுந்தமாவடி, வேதாரண்யம், கரியாப்பட்டினம், வாய்மேடு ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த மின்நுகர்வோர் தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

Tags : Nagai ,
× RELATED கோடியக்கரை வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்