×

வயிரவன்பட்டியில் இரட்டை மாட்டுவண்டி பந்தயம்

திருப்புத்தூர், ஆக.2: திருப்புத்தூர் அருகே நகர வைரவன்பட்டியில்  வைரவ சுவாமி தேர்த்திருவிழாவை முன்னிட்டு சிடிஎஸ் சிதம்பரம் செட்டியார் நினைவாக மாபெரும் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. வைரவன்பட்டி முதல் தென்கரை சாலை வரை எல்கை நிர்ணயம் செய்து பந்தயம் நடத்தப்பட்டது. இதில் பெரியமாடு, சின்னமாடு, நடுமாடு என 3 பிரிவுகளில் 48 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. பெரியமாடு பிரிவில் 9 ஜோடிகள் பங்கேற்றன. இதில் கீழச்சிவல்பட்டி சி.டி.எஸ்.சிதம்பரம் செட்டியார் மாடு முதல் பரிசினையும், வெட்டிவயல் சுந்தரேசன் மாடு 2ம் பரிசையும், ஏரியூர் பெத்தாச்சி அம்பலம் மாடு 3ம் இடத்தையும், தேவகோட்டை லெட்சுமணன் செட்டியார் மாடு 4ம் இடத்தையும் வென்றன.

சின்னமாடு பிரிவில் 28 ஜோடிகள் கலந்து கொண்டன. இதில் முதல் பரிவில் அவனியாபுரம் மோகன் மாடு முதலிடத்தையும், பூக்கொல்லை காளிமுத்து மாடு 2ம் இடத்தையும், பூதகுடி சுப்பிரமணியன் மாடு 3ம் இடத்தையும், மதகுபட்டி குமார் மாடு 4ம் இடத்தையும், இரண்டாவது பிரிவில் குண்டேந்தல்பட்டி சுப்பு முதல் பரிசையும், கே.கே.பட்டி சந்திரன் இரண்டாவது பரிசையும், ஈளக்குடிப்பட்டி யாழினி மூன்றாவது இடத்தையும், கோனாப்பட்டு கொப்புடையம்மாள் 4வது இடத்தையும் பிடித்தனர். நடுமாடு பிரிவில் 11 ஜோடிகள் கலந்து கொண்டன. இதில் பூக்கொல்லை கத்தீஸ்வரன் மாடு முதலிடத்தையும், கோ.வேலங்குடி சோலையன் மாடு 2ம் இடத்தையும், கல்லூரணி பாலாஜி மாடு 3ம் இடத்தையும், மருங்கூர் பாண்டி 4வது இடத்தையும் பிடித்தனர். வெற்றி பெற்ற மாடுகளுக்கு வேஷ்டி துண்டு அணிவித்து மரியாதை செய்யப்பட்டு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. பந்தய ஏற்பாடுகளை சிடிஎஸ்.சண்முகம், நகர வைரவன்பட்டி ஊர்மக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர்.

Tags : Vairavanpatti ,
× RELATED நெற்பயிர்களை சேதப்படுத்தும் பன்றிகளை...