×

அழகுமுத்து மாரியம்மன் கோயிலில் ஆடி பொங்கல்

பரமக்குடி, ஆக.2:  அரசநகரி கிராமத்தில் உள்ள கலைச்செல்வி அழகு முத்து மாரியம்மன் கோவிலில் வருடாபிஷேகம் மற்றும் ஆடி பொங்கல் திருவிழா நடைபெற்றது. பரமக்குடி அருகே உள்ள போகலூர் ஒன்றியம் அரசநகரி கிராமத்தில் கலைச்செல்வி  அழகு முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆடி மாதத்தில் நடைபெறும் ஆடி பொங்கல் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. கடந்த 22ம் தேதி வருடாபிஷேகம் நடைபெற்றதை தொடர்ந்து ஆடி பொங்கல் திருவிழா காப்புக்கட்டுடன் தொடங்கியது. தினம் தோறும் அம்பாளுக்கு அபிஷேகங்களும் ஆராதனைகளும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. வீதி உலா சென்று அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இரண்டாவது நாள் நிகழ்ச்சியில் பெண்கள் திருவிளக்கு பூஜை செய்தும், பூக்கூடை சுமந்து அம்மனுக்கு பூக்களால் அலங்கரித்து வழிபட்டனர். நேற்று ஆடி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் அக்னிச்சட்டி, ஆயிரங்கண் பானை, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் கண்ணன் மற்றும் கோவில் நிர்வாகி  சுப்பம்மாள் குருந்தலிங்கம்  செய்திருந்தனர்.

Tags : Aadi Pongal ,Akummuthu Mariamman Temple ,
× RELATED வேலாயுதபுரம் பத்ரகாளியம்மன் கோயிலில் ஆடி பொங்கல் விழா கொடியேற்றம்