பழநி, ஆக. 2: பழநி அருகே வாகரை உபமின் நிலையத்தில் இன்று (ஆக.2, செவ்வாய்) பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே இன்று காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை வாகரை, மரிச்சிலம்பு, பூலாம்பட்டி, திருவாண்டபுரம், அப்பனூத்து, தொப்பம்பட்டி, வேலம்பட்டி, ஆலாவலசு, புங்கமுத்தூர், மேட்டுப்பட்டி, வேப்பன்வலசு, பூசாரிக்கவுண்டன்வலசு ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம் நிறுத்தப்படுமென மின்வாரிய செயற்பொறியாளர் பிரகாஷ்பாபு தெரிவித்துள்ளார்.