×

புதுவையில் மேலும் 38 பேருக்கு தொற்று

புதுச்சேரி, ஆக. 2: புதுவையில் நேற்று புதிதாக 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து சுகாதாரத்துறை செயலர் உதயகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
 புதுச்சேரியில் 612 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுவை - 35, காரைக்கால் - 3 என மொத்தம் 38 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு 6.12 சதவீதம் ஆகும். மாகே, ஏனாமில் புதிதாக யாரும் தொற்றால் பாதிக்கப்படவில்லை. மேலும், கிருமாம்பாக்கம் இளங்கோ நகரை சேர்ந்த 74 வயது முதியவர் தொற்றால் பாதிக்கப்பட்டு ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1966 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது புதுச்சேரி மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 740 ஆக குறைந்துள்ளது. கோரிமேடு அரசு மார்பு நோய் மருத்துவமனையில் 11 பேரும், கோவிட் கேர் சென்டரில் 6 பேர் என 17 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீட்டில் 723 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அதே நேரத்தில் நேற்று 110 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். மேலும், சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என முதல் டோஸ் 9,79,669 பேருக்கும், 2வது டோஸ் 7,63,442 பேருக்கும், பூஸ்டர் டோஸ் 1,01,215 பேருக்கும் என மொத்தம் 18,44,326 கொரோனா தடுப்பூசிகள் இதுவரை போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 4,878 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Puduvai ,
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு;...