×

விராலிமலை பகுதியில் கன மழை

விராலிமலை,ஆக.2: விராலிமலை அதன் சுற்று பகுதிகளில் தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கன மழையால் குளிர்ந்த காற்று வீசியது.
விராலிமலை மற்றும் அதன் சுற்று பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. பகல் முழுவதும் வெளுத்து வாங்கிய வெயிலால் சிறுவர்கள், வயதானவர்கள், பெண்கள் வீட்டை விட்டு வெளியில் வர முடியாத நிலையில் வீட்டிற்குள்ளேயே முடங்கினர். இந்நிலையில் நேற்று மாலை திடீரென்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து கருமேகங்கள் சூழ குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியதை தொடர்ந்து பலத்த காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது. சுமார் 4.30 மணி அளவில் பெய்யத் தொடங்கிய மழை 6 மணியை தாண்டியும் கன மழையாகவும் தூரல் மழையாகவும் விட்டு விட்டு பெய்து கொண்டிருந்தது. வெயிலின் தாக்கத்தால் வீட்டுக்கு முடங்கிய மக்களுக்கு இந்த மழை மகிழ்ச்சி தருவதாக அமைந்துள்ளது.
மேலும் சுற்றுப்பகுதி முழுவதும் குளிர்ந்த காற்று வீசி வருவதால் கூடுதல் மகிழ்ச்சியுடன் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Viralimalai ,
× RELATED இலுப்பூர் அருகே கிராமநிர்வாக அலுவலரை தாக்கி செல்போன் பறிப்பு