கிருஷ்ணராயபுரம், ஆக.2:கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே பழையஜெயங்கொண்ட சோழபுரத்தில் உள்ள பழமை வாய்ந்த சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட ஆரணவல்லி சமேத ஆளவந்தீஸ்வரர் சிவாலயம் உள்ளது.
இக்கோயிலில் உள்ள அம்மனுக்கு ஆடி பூராடத்தை முன்னிட்டு பால், தயிர், திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதன் பின் ஆரணவல்லி அம்பிகைக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டு தீப ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வளையல் அலங்காரத்தில் காட்சியளிக்கும் அம்பாளை தரிசனம் செய்தனர். திருக்கோவில் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.