×

தவறை தட்டிக் கேட்டவரை கொலை செய்த 4 பேர் கைது


தேனி, ஜூலை 30: தேனி அருகே கோடாங்கிபட்டியில் அமராவதி தெருவை சேர்ந்தவர் பாண்டியன்(61). இவர் தேனியில் மரக்கடை நடத்தி வந்தார். இவரது வீட்டருகே நிறுத்தப்பட்டுள்ள சமுதாய தேர் நிற்கும் இடத்தில் இதே கிராமத்தை சேர்ந்த கருணாநிதி மகன் சுகுமாரன்(19), காளிதாஸ் மகன் கபில்(22), சந்திரகுமார் மகன் சேவாக்(19), மாணிக்கம் மகன் அஜித்குமார் (22), வைரவன் மகன் சந்திரகுமார்(45) ஆகியோர் மது அருந்திவிட்டு ஆபாசமாக பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனை பாண்டியன் கண்டித்தபோது 5 பேரும் அவரைசரமாரியாக தாக்கினர். இதில் பாண்டியன் உயிரிழந்தார். பாண்டியன் மனைவி செல்வி புகாரில், பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிந்து 4 பேரை கைது செய்து தலைமறைவான சந்திரகுமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ