×

விபத்துக்களில் சிக்குவோரை மீட்போருக்கான விருது: ஆக.2க்குள் விண்ணப்பிக்கலாம்

தேனி, ஜூலை 30: நீர்நிலைகளில் மூழ்குவோரை காப்பாற்றுதல், மின்சார விபத்துக்களில் சிக்குவோரை காப்பாற்றுதல், தீவிபத்துக்கள்,நிலச்சரிவு, விலங்கினங்களால் தாக்குதல், சுரங்கமீட்பு நடவடிக்கைகள் போன்ற விபத்துக்கள் ஏற்படும் போது, விபத்தில் சிக்குவோரை காப்பாற்றுவோருக்கு இந்திய ஒன்றிய அரசு பல்வேறு விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. இதன்படி, மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளவரை வீரத்துடன் போராடி, மீட்பவர்களக்கு சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா விருதும், துணிச்சலுடன் தாமதமின்றி செயல்பட்டு மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளவரை போராடி மீட்பவருக்கு உத்தம் ஜீவன் ரக்ஷா விருதும்,

தனக்கு காயம் ஏற்படினும் வீரத்துடன் தாமதமின்றி செயல்பட்டு உயிரைக் காப்பாற்றுவோருக்கு ஜீவன் ரக்ஷா விருதும் வழங்கப்பட்டு வருகிறது.
இத்தகைய வீர,தீர செயல்புரிந்து விபத்தில் சிக்கியோரை காப்பாற்றிய சாதனையாளர்கள் இவ்விருதுகளை பெற விரும்பினால், www.sdat.tn.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து, விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, வருகிற ஆகஸ்ட் 2ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...