அலங்காநல்லூர், ஜூலை 29: பாலமேடு அருகே தோட்டத்தில் தங்கியிருந்த விவசாயி கழுத்தறுத்து ெகாலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை பாலமேடு அருகே மறவபட்டி கிராமத்தை சேர்ந்தவர் நல்லதம்பி (65). விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் தனது தோட்டத்தில் உள்ள மாட்டு கொட்டகத்திற்கு சென்றுள்ளார். இரவு மழை பெய்ததால் வீட்டிற்கு வர முடியாமல் தனியாக தோட்டத்தில் தங்கி இருந்துள்ளார். நல்லதம்பி காலை வரை வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் தோட்டத்திற்கு சென்று பார்த்தனர். அப்ேபாது நல்லதம்பி கழுத்தறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.