×

ஆடி அமாவாசையை முன்னிட்டு சாய்பாபா ஆலயத்தில் பாலாபிஷேகம்

திண்டுக்கல், ஜூலை 29: திண்டுக்கல் பாரதிபுரத்தில் உள்ள சாய்பாபா ஆலயத்தில், ஆடி அமாவாசையான நேற்று பக்தர்கள் பாலபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர். திண்டுக்கல்லில் உள்ள பாரதிபுரத்தில் சாய்பாபா ஆலயம் அமைந்துள்ளது. இங்கு வியாழன்தோறும் சாய்பாபாவிற்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். ஆடி அமாவாசையான நேற்று காலை முதல் ஏராளமான பக்தர்கள் தங்கள் கைகளால் சாய்பாபாவிற்கு பாலாபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர். அதன் பின்னர் சாய்பாபாவிற்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேக ஆராதனை, பஜனை நடைபெற்றது. அதன்பின், கோயில் வளாகத்தில் அன்னதான விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், திண்டுக்கல் மற்றும் நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பக்தர்கள் சாய்பாபாவிற்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டுச் சென்றனர்.

Tags : Saibaba ,Aadi Amavasai ,
× RELATED திண்டுக்கல் சாய்பாபா ஆலயத்தில் அன்னதானம் வழங்கல்