×

சென்னை நிம்மதி இல்லத்தில் பணியாற்ற முன்னாள்படை வீரர்களின் ஆதரவற்ற பெண்கள் விண்ணப்பிக்கலாம்


திருவாரூர், ஜூலை 29:  இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, முன்னாள் படை வீரர்களின் ஆதரவற்ற கைம்பெண்கள் மற்றும் வயது முதிர்வடைந்த பெண்கள் ஆகியோருக்கு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் நிம்மதி இல்லம் என்ற பெயரில் முதியோர் இல்லம், போர் விதவைகள் நல சங்கத்தினால் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிம்மதி இல்லத்தில் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படை வீரர்களின் ஆதரவற்ற கைம்பெண்கள் மற்றும் வயது முதிர்வடைந்த பெண்கள் சேர்ந்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இது குறித்து விபரங்கள் அறிய கலெக்டர் அலுவலக இணைப்பு கட்டிடத்தில் இயங்கி வரும் முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தினை நேரிலோ அல்லது O4366 -290080 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Tags : Chennai ,Relief Home ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...