×

தஞ்சாவூர் மாவட்டத்தில் 4 புதிய டிஎஸ்பிக்கள் பொறுப்பேற்பு

தஞ்சாவூர், ஜூலை. 29: தஞ்சாவூர் மாவட்டத்தில் புதிய நான்கு டி.எஸ்.பி.,க்கள் பொறுப்பேற்று கொண்டனர். கோவை மாவட்டத்தை சேர்ந்த ஜாபர் சித்திக் திருவிடைமருதூர் காவல் துணை கண்காணிப்பாளராகவும், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பி.என்.ராஜா தஞ்சாவூர் டவுன் காவல் துணை கண்காணிப்பளராகவும் டிஎம்டி. திவ்யா தஞ்சாவூர் மாவட்ட குற்ற பதிவேடு அலுவலக காவல் துணை கண்காணிப்பாளராகவும், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பிரிதிவ்ராஜ் சௌகான் பட்டுக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளராகவும், தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த டி.எம்.டி.நித்யா வல்லம் காவல் துணை கண்காணிப்பாளராகவும் நேற்று பொறுப்பேற்று கொண்டனர்.

Tags : Thanjavur ,
× RELATED தஞ்சாவூரில் பட்டப்பகலில் பரபரப்பு...