சீர்காழி, ஜூலை. 29: ஆடி அமாவாசையை முன்னிட்டு சீர்காழி அருகே கதிராமங்கலம் சித்தர்புரம் கருப்புசாமி கோயிலில் பால்குட திருவிழா நடைபெற்றது. திருநகரி ஆற்றங்கரையில் இருந்து பால்குட ஊர்வலம் புறப்பட்டது. மகா சக்தி கரகம், பச்சைக்காளி, பவளக்காளி எட்டு கை காளி வேஷம் மிட்ட பக்தர்கள் ஆக்ரோஷ ஆட்டத்துடன் ஊர்வலமாக வந்தனர். மேளதாளங்கள் முழங்க வான வேடிக்கையுடன் முக்கிய வீதி வழியாக சென்று கோயிலை சென்றடைந்தனர்.
தொடர்ந்து சுவாமிகளுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. அப்போது உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை திலகராஜா சுவாமிகள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.