×

கரூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை திருட்டு

கரூர், ஜூலை 29: கரூர் அருகே பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து நான்கே முக்கால் தங்க நகைகள் திருடு போன சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். கரூர் வடக்கு காந்திகிராமம் நேதாஜி நகரைச் சேர்ந்தவர் ரெங்கன்(55). இவர், கரூரில் உள்ள ஒரு தனியார் சிமெண்ட் தொழிற்சாலையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர், கடந்த 22ம் தேதி அன்று வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டார். மறுநாள் காலை வந்து பார்த்த போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, அலமாரியில் வைத்திருந்த 2 பவுன் தங்க செயின், ஒரு மோதிரம், தோடு, மூக்குத்தி என மொத்தம் நான்கே முக்கால் பவுன் நகைகளை காணவில்லை என தெரிகிறது. இது குறித்து ரெங்கன் பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் புகாரின் அடிப்படையில் திருட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருட்டுப்போன நகைகளின் மதிப்பு ரூ.71 ஆயிரம் என கூறப்படுகிறது. ராயனூர் வழியாக குறைந்த அளவே ஷேர் ஆட்டோக்கள் ஓடுகிறது. அதிலும் தொங்கியபடியே செல்கின்றனர். இதனால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

Tags : Karur ,
× RELATED அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற...