×

நாகர்கோவிலில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், ஜூலை 29: தேசிய பணமாக்கல் திட்டம் என்ற பெயரில் பி.எஸ்.என்.எல் டவர்களையும், ஒ.எப்.சி கேபிள்களையும் தனியாருக்கு தாரை வார்ப்பதை கைவிட வேண்டும். பி.எஸ்.என்.எல் நிறுவனம் 4ஜி சேவைகளை தொடக்க  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து பி.எஸ்.என்.எல் ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நாகர்கோவிலில் பி.எஸ்.என்.எல் ெபாதுமேலாளர் அலுவலகம் முன்பு நேற்று உணவு இடைவேளையில் கருப்பு அட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடந்தது. கூட்டமைப்பு மாவட்ட தலைவர் லட்சுமண பெருமாள் தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுயம்புலிங்கம், எஸ்என்இஏ மாவட்ட செயலாளர் அலெக்சாண்டர் கிளாட்சன், எஸ்ஏவிஏ பிஎஸ்என்எல் மாவட்ட செயலாளர் பேச்சிநாதன், ஜோசப்ராஜ், அச்சுதானந்த் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Tags : BSNL ,Nagercoil ,
× RELATED சாத்தான்குளம்- பண்டாரபுரம் சாலையில்...