திருமங்கலம், ஜூலை 28: திருமங்கலம் அடுத்துள்ள கட்ராம்பட்டியை சேர்ந்தவர் சுப்பையா (37). ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இதுவரையில் திருமணம் ஆகவில்லை. இதனால் மனவிரக்தியில் இருந்த சுப்பையா நேற்று மதியம் வீட்டில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரில் திருமங்கலம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.