திருமங்கலம் அருகே கரடிக்கல் எம்ஜிஆர்நகர் பஸ்ஸ்டாப்பில் உள்ள கடையில் அரசால் தடை விதிக்கப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. ஆஸ்டின்பட்டி எஸ்ஐ சிவலிங்கம் தலைமையில் போலீசார் அக்கடையில் சோதனை நடத்தி 36 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கடை உரிமையாளர் கரடிக்கல்லை சேர்ந்த சின்னசாமியை (45) கைது செய்து, அவரிடமிருந்த ரொக்க பணம் ரூ.1,660யையும் பறிமுதல் செய்தனர்.