×

காலநிலை மாற்றம் குறித்து பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களின் பேச்சு வெற்று பேச்சு தான் : உலகத் தலைவர்களை விளாசிய கிரெட்டா துன்பர்க்

மிலன் : உலக காலநிலை மாற்றம் குறித்து இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களின் பேச்சு வெற்று பேச்சாக மட்டுமே இருக்கிறது என்று பிரபல சுற்றுசூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் விமர்சித்துள்ளார்.சுவீடன் நாட்டைச் சேர்ந்த இளம் சுற்றுசூழல் போராளியான கிரேட்டா தன்பெர்க், இத்தாலியில் உள்ள மிலன் நகரில் யூத் ஃபார் க்ளைமேட் (Youth4Climate) காலநிலை மாற்றத்துக்கான இளைஞர்கள் என்ற மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். அப்போது இந்திய பிரதமர் மோடி, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆகியோர் அறிக்கைகளை சுட்டிக் காட்டிய கிரேட்டா தன்பெர்க், இந்த தலைவர்களின் பேச்சு பேச்சாக மட்டுமே உள்ளது என்றும் காரியத்தில் ஒன்றும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.இந்த தலைவர்கள் பசுமை குறித்து அனுமானங்களை மட்டுமே அளித்து இருப்பதாகவும் கிரேட்டா தன்பெர்க் குறிப்பிட்டார். பருவநிலை மாற்றத்திற்கு எதிராக புதிய யோசனைகள், ஒத்துழைப்பு, மனோதிடம் தேவை என்று பேசிய மோடியின் பேச்சை சுட்டிக் காட்டிய கிரேட்டா தன்பெர்க், எந்த செயலிலும் இறங்காத மோடி உள்ளிட்ட சர்வபிர்சா தலைவர்களின் பேச்சு வெற்று பேச்சு என சாடியுள்ளார். 2% நாடுகள் மட்டுமே பசுமை குடில் வாயு குறித்து கவலை தெரிவிப்பதாகவும் சுற்றுசூழல் போராளி கிரேட்டா தன்பெர்க்  குறிப்பிட்டுள்ளார். …

The post காலநிலை மாற்றம் குறித்து பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களின் பேச்சு வெற்று பேச்சு தான் : உலகத் தலைவர்களை விளாசிய கிரெட்டா துன்பர்க் appeared first on Dinakaran.

Tags : Modi ,Greta Thunberg ,Milan ,Dinakaran ,
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...