×

தாராபுரம் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் தற்காலிக ஒப்பந்த பயிற்றுநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

திருப்பூர், ஜூலை 28:   திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தாராபுரத்தில் உள்ள அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் கைவினைஞர் பயிற்சி திட்டமாக மாற்றப்பட்ட தொழிற் பிரிவுகளில் 2 முழுநேர தற்காலிக ஒப்பந்த மற்றும் பயிற்றுநர் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. டூல் அண்ட் டை மேக்கர் தொழிற் பிரிவில் ஒரு காலி பணியிடம் (முழுநேர தற்காலிக ஒப்பந்த பயிற்றுநர்) உள்ளது. இந்த பணியிடமானது மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர், முன்னுரிமையற்றவர் என்ற இன சுழற்சி அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.

வயர்மேன் தொழிற்பிரிவில் ஒரு காலிப்பணியிடம் (தற்காலிக முழுநேர தற்காலிக ஒப்பந்த பயிற்றுநர்) உள்ளது. இந்த பணியிடமானது. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் தவிர) முன்னுரிமையற்றவர் என்ற இன சுழற்சி அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இதற்கு டிகிரி, டிப்ளமோ இன் எலக்ட்டரிக்கல் இன்ஜினியரிங் மற்றும் என்டிசி இன் வயர்மேன் டிரேட் (3 வருட இன்டஸ்டரியல் அனுபவம்) ரெலவென்ட் டிரேட், என்ஏசி இன் வயர்மேன் டிரேட் (2 வருட இன்ஸ்டரியல் அனுபவம்) ரெலவென்ட் டிரேட் கல்வி தகுதி ஆகும். 10ம் வகுப்பு படித்த பின்னர் ஐடிஐ முடித்தவர்களுக்கு வயது வரம்பு 18 வயது முதல் 32 வயது வரை ஆகும்.

12ம் வகுப்பு படித்து விட்டு ஐடிஐ முடித்தவர்கள் டிப்ளமோ டிகிரி முடித்தவர்களுக்கு உச்ச வயது வரம்பு இல்லை. தகுதியான தற்காலிக ஒப்பந்த பயிற்றுநர்களுக்கு மாதம் ரூ.20 ஆயிரம் தொகுப்பூதியமாக வழங்கப்படும். தகுதியுடையவர்கள் உரிய சான்றிதழ்களின் ஒளிப்பட நகல்களுடன் தாராபுரம் அரசினர் தொழிற்பயிற்சி நியைலத்திற்கு நேரில் வரலாம். அல்லது தாராபுரம் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர், 638657 என்ற முகவரிக்கு வருகிற 19ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Tarapuram Govt ,Vocational Training ,
× RELATED தஞ்சாவூரில் இன்று தொழிற் பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம்