×

லாரி டிரைவர் திடீர் சாவு

ஈரோடு, ஜூலை 28: சேலம் மாவட்டம், மங்கானூரை சேர்ந்தவர் சண்முகம் (54). லாரி டிரைவர். இவரது மனைவி ராணி (45). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. இந்நிலையில், கடந்த 25ம் தேதி ஆந்திர மாநிலத்தில் இருந்து சிமெண்ட் பாரம் ஏற்றி கொண்டு சண்முகம் ஈரோடு மாவட்டம், பெருந்துறைக்கு வந்துள்ளார். நேற்று முன்தினம், அவர் பெருந்துறை அருகே சீனாபுரத்தில் உள்ள கான்கிரீட் கல் தயாரிக்கும் நிறுவனத்தில் சிமெண்ட் பாரம் இறக்கி விட்டு மீண்டும் கிளம்ப முயன்றபோது திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே சண்முகம் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Lorry ,
× RELATED சைக்கிள் திருடிய லாரி டிரைவர் கைது