×

தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, ஜூலை 28: உணவு பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை உயர்த்திய ஒன்றிய அரசை கண்டித்து ஈரோடு சூரம்பட்டி பஸ் ஸ்டாப் அருகே தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், மாநகர் மாவட்ட செயலாளர் ஆனந்த் தலைமை தாங்கினார். இதைத்தொடர்ந்து, உணவு பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை உயர்த்திய ஒன்றிய அரசை கண்டித்தும், மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் கண்டன் கோஷங்கள் எழுப்பினர். இதில், தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags : Democrats ,
× RELATED ஜனநாயக கடமையாற்றிட ஆர்வமுடன் வந்து...