×

பண்ருட்டி அருகே கோஷ்டி மோதலில் 3 பேருக்கு அரிவாள் வெட்டு 19 பேர் மீது வழக்கு

பண்ருட்டி, ஜூலை 27: பண்ருட்டி அருகே கோஷ்டி மோதலில் 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக 19 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே திருவதிகை செட்டிபட்டறை காலனியை சேர்ந்தவர் தேவராஜ் மகன் முரளி (37). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ரங்கநாதன் மகன் செந்தில்குமார் (21) என்பவருக்கும் தேர்தல் முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் நேற்று முன்தினம் முரளி வீட்டில் இருந்தபோது, இவருடைய மாமா வெங்கடேசனை எதிர் தரப்பினர் அடித்து விட்டதாக கேள்விப்பட்டு அந்த இடத்திற்கு சென்றபோது அவர்கள் எங்க மேலே போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கிறியா என்று முரளியையும், வெங்கடேசனையும் அரிவாளால் வெட்டி உள்ளனர். இதில் முரளியும், வெங்கடேசனும் படுகாயம் அடைந்துள்ளார். இதனையறிந்து அங்கு திரண்டு வந்த முரளி ஆதரவாளர்களும், செந்தில்குமார் ஆதரவாளர்களும் சரமாரியாக தாக்கி கொண்டனர்.

இதில் செந்தில்குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் அடிப்படையில் பண்ருட்டி போலீசார் பீமாசிங் மகன் கார்த்திகேயன், தர்மசிவம் மகன் வெற்றிவேல், சேகர் மகன் சாந்தகுமார், ரங்கநாதன் மகன் தர்மாவளவன், சாய்குமார் ஆறுமுகம் மகன் அருண்குமார், தேவராஜ் மகன் முரளி, ராமசாமி மகன் வெங்கடேசன், தேவராஜ் மகன் முத்தமிழ், முருகன் மகன் அகிலன், தணிகாசலம் மகன் குமார், தனுஷ், ஹரிஷ், முருகன் மகன் தாஸ், ஆறுமுகம் மகன் அருள்செல்வம், கோவிந்தராஜ் கிச்சா, அரவிந்த் ஆகிய 19 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags : Panrutti ,
× RELATED பறக்கும் படை சோதனையில் ₹86 ஆயிரம் சிக்கியது