திருச்சி, ஜூலை 27: தேசியக் கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு துவக்க விழா கடந்த 25ம்தேதி நடந்தது. கல்லூரி விளையாட்டு அரங்கில் நடந்த இந்த விழாவில் 2000க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் சுந்தரராமன் தலைமை தாங்கி கல்லூரியின் பெருமைகள் கல்லூரியில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் மற்றும் தரமான கல்லூரியை தேர்வு செய்ததற்கும் வாழ்த்துக்களை ெதரிவித்தார். முன்னதாக மண்ணியில் துறைத் தலைவர் இணைப்பேராசிரியர் சிவக்குமார் வரவேற்றார். தழிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் நீலகண்டன் சிறப்புரையாற்றினார். முடிவில் வேதியியல் துறைத் தலைவர் முனைவர் விவேகானந்தன் நன்றி கூறினார்.