×

திருவையாறு ஒன்றியத்தில் மகளிர் சுயஉதவிக்குழுவுக்கு ரூ.61 லட்சம் கடன் உதவி

திருவையாறு, ஜூலை 27: திருவையாறு ஊரா ட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் திருவையாறு ஒன்றியத்தில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுவிற்கு கடன் வழங்கும் விழா நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய ஆணையர் ஜான்கென்னடி தலைமை வகித்தார். ஒன்றியக்குழுத் தலைவர் அரசாபகரன் 13 சுய உதவி குழுக்களுக்கு ரூ.61 லட்சம் கடன் உதவிகளை வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஜெயசீலன், அய்யாசாமி, மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

Tags : Thiruvaiyaru ,
× RELATED திருவையாறு நூலகத்தில் உலக புத்தக தின விழா