×

மெய்க்குடிபட்டி பள்ளியில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு கோலப்போட்டி

கந்தர்வகோட்டை, ஜூலை 27: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் பழைய கந்தர்வகோட்டை ஊராட்சியில் உள்ள மெய்க்குடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவிகள் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் கோலப் போட்டியில் கலந்து கொண்டனர். இதில் மாணவிகள் சதுரங்க போட்டிக்கான அட்டையை வெள்ளை- கருப்பு வண்ணத்திலும் அட்டையில் நகர்த்தும் காய்களையும் அழகாக வரைந்து இருந்தனர். சிறப்பாக வரைந்து இருந்த மாணவிகளை தலைமையாசிரியை ஜெயந்தி சண்முகம் பாராட்டினார். அவர் பேசியபோது செஸ் விளையாட்டை பொறுத்தவரை சிந்தனையும் செயலும் ஒன்று சேர வைக்கும் விளையாட்டு என்று தெரிவித்தார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் வசந்தி, லீமாரோஸ், மகாலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Chess Olympiad Awareness Competition ,Meikudipatti School ,
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு