×

தாசில்தாரிடம் விவசாயிகள் மனு

திருவில்லிபுத்தூர், ஜூலை 27: தேசிய நெடுஞ்சாலை பணிக்காக விவசாயிகளிடம் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என நெடுஞ்சாலைத்துறை தாசில்தாரிடம் மனு அளித்தனர். திருவில்லிபுத்தூரில் தேசிய நெடுஞ்சாலை (எண்.744) பணிக்காக திருவில்லிபுத்தூர் தாலுகாவில் அரசு அறிவிப்பின் பெயரில், விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு, விவசாயிகளை கலந்து ஆலோசித்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில்   நெடுஞ்சாலைத்துறை தாசில்தார் மாரிமுத்துவிடம் மனு அளித்தனர். இந்த மனு கொடுக்கும் நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில நிர்வாக குழு உறுப்பினரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான ராமசாமி முன்னாள் எம்பி லிங்கம், முன்னாள் எம்எல்ஏ பொன்னு பாண்டியன், ஒன்றியச் செயலாளர் பலவேசம், பாட்டக்குளம் விவசாயிகள், கூட்டுறவு சங்க தலைவர் பாரதிதாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Tahsildar ,
× RELATED சிவகங்கை அருகே டூவீலரில் கொண்டு சென்ற பணம் பறிமுதல்