×

காங்கிரசார் ஆர்ப்பாட்டம் மேயர் தினேஷ்குமார் துவக்கி வைத்தார் செல்லாண்டியம்மன் கோவில் குண்டம் விழா ஏராளமானோர் குண்டம் இறங்கினர்

திருப்பூர், ஜூலை 27:செல்லாண்டியம்மன் கோவில் ஆடிக்குண்டம் திருவிழாவையொட்டி, குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து குண்டம் இறங்கி, நேர்த்திக்கடன் செலுத்தினர். திருப்பூர் மாநகரின் காவல் தெய்வமாக திகழும் செல்லாண்டியம்மன் கோவில், வளம் பாலம் அருகே அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் குண்டம் விழா, வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு கிராமசாந்தி நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து பூச்சாட்டு, கணபதி ஹோமம், கொடியேற்றம், சக்தி கரகம் அழைத்தல், மகாமுனி சிறப்பு பூஜை ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.

விழாவையொட்டி மீனாட்சியம்மன், சமயபுரம் மாரியம்மன், அங்காளம்மன், சவுடேஸ்வரி அம்மன் அலங்காரங்களில், அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நேற்று (26ம் தேதி) காலை 9 மணிக்கு துவங்கியது. முதலில் பூசாரி குண்டம் இறங்கினார். அதன்பின், அம்மனுக்கு விரதம் இருந்த பக்தர்கள் இறங்கி, நேர்த்திக்கடன் செலுத்தினர். நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள், குழந்தைகளுடன் குண்டம் இறங்கினர். குண்டம் இறங்குதலுக்கு பின், அக்னி அபிஷேகம், மாவிளக்கு எடுத்து வருதல், பொங்கல் வைத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags : Mayor ,Dinesh Kumar ,Congress ,
× RELATED உடற்பயிற்சிக்கான தளம் அமைக்கும் பணி ஆய்வு